Loading...

Articles.

Enjoy your read!

தனிமை ஒரு வண்ணமா!

தனிமை ஒரு வண்ணமா?

 

கவிதை ஊற்றெடுப்பது தனிமையிலே!

கவலை உளச்சூழ்வது தனிமையிலே!!

 

கற்பனை செய்யும் தருவாயிலே

காதல் கனா காணும் கனங்களிலே

தனிமை இனிமையே!!

 

உற்சாகத்தின் உச்சியிலே

உன்னை நீ உணர்கையிலே

தனிமை இனிமையே!!

 

உள்ளம் சிதைக்கின்றவேளையிலே

உண்மை கசக்கும் நொடிகளிலே

தனிமை கொடுமையே!!

 

தள்ளாடும் வயதினிலே

தலைசாய்க்க தோளில்லாத் தருணங்களிலே

தனிமை கொடுமையே!!

 

 

அமைதிக்கு வெண்மை

ஆத்திரத்திக்கு செம்மை

தனிமைக்கு எவ்வண்ணம்??

சூழ்நிலைக்கேற்ப!!

Tagged in : LONELINESS, Tamil, poem,

   

Similar Articles.