Loading...

Articles.

Enjoy your read!

நிதர்சன உண்மை

கண்ணீரை அறியும் உலகம்
ஏனோ இதயத்தை மறக்கிறது
தேவைக்காக பழகும் உலகில்
நட்பை தேடுவது தவறா....?

பேச துடிக்கிறது இதயம்
ஆனால் கேட்கவோ ஆள் இல்லை
நடக்க துடிக்கும் கால்கள்
வழிகள் அனைத்தையும் அடைக்கும் கவலைகள்
பறக்க துடிக்கும் மனம்
சிறகை வெட்டும் உலகம் ...

நட்பு என்று கை நீட்டினேன்
தேவை என்று கரம் பிடித்தாய்
இன்பத்தில் அருகே நின்றாய்
துன்பத்தில் நீராவியாய் சென்றாய்
உனக்காக குரல் கொடுத்தேன்
எனக்காக நீ கை கூட கொடுக்கவில்லை
உன்னில் ஒருவனாக என்னை நினைத்தேன்
நீ வேற்றவன் என்று மீண்டும் மீண்டும் உணர்த்தினாய்

சுற்றி நூறு அறிந்த முகங்கள்
ஆனாலும் ஆளில்லா காட்டில் வாழும் நான் .......!

Tagged in : trust, Friends, friendship,

   

Similar Articles.