Loading...

Articles.

Enjoy your read!

தொட்டால் சிணுங்கி

ரோமாஞ்சம் உற்று சிலிர்த்தாயோ?

அல்ல நலினம் கொண்டு மெலிந்தாயோ?

கரம் கண்டு வியந்தாயோ?

எஞ்சி நாணம் கொண்டு கவிழ்ந்தாயோ?

கதிர் சுடர் பட்டுக் கசிந்தாயோ?

அன்றி கள்வனைக் கண்டு ஒளிந்தாயோ?

மெளனத்தில் ரசிக்கத் தலை குணிந்தாயோ?

நிலவின் ஒலி ஏங்கித் துயில்கொள்ளச் சென்றாயோ?

ஏவல் ஏதும் வினவாது மெளனத்தில் ரசிக்கின்றேன்....

வதனம் நிமிர்ந்து காத்திருப்பைத் தவிர்ப்பாயா???

Tagged in : nature, poem, PLANTS,

   

Similar Articles.