Loading...

Articles.

Enjoy your read!

யார்  நீ?

செல்லும் பாதையில் நிலைதடுமாறிய போது நிலைநிறுத்தினாய்            

யார் என்று கேட்டேன் பதில் இல்லை. 

ஆனால்

தந்தையைப் போல் அறிவுரை வழங்கினாய்,

தந்தையா என்று கேட்டேன் பதில் இல்லை.

பிறகு தாயைப்போல் அரவணைத்தாய்

யார் என்று தெரியாமல் பாதையில் உன்னோடு நடந்தேன்.

உன்னோடு கடந்து வந்த பாதையில் மகிழ்ச்சி மட்டும்!

ஒரு கட்டத்தில் நின்றேன், யார் என்று கேட்டேன் 

அதற்குத் தாய் தந்தைக்கு அடுத்த நிலை,

என்றும் உன் மனதில் முதல் உறவு நிலை என்றாய்.

 

யார் என்று அறிந்து அழைப்பதற்குள்,

உன் பாதையில் நீயும்

 என் பாதையில் நானும்

வெகு தூரம் சென்றுவிட்டோம்! 

உன்னை மீண்டும் சந்திக்கும் நேரத்திற்காக

உன் நினைவுகளுடன் காத்திருக்கின்றேன்!

Tagged in : college, relationship, poem,

   

Similar Articles.