Loading...

Articles.

Enjoy your read!

வனப்பும் வாழ்க்கையும்!

இருள் சூழ்ந்த இரவின் அழகு, ஒளி நிறைந்த நிலவால் புலப்படும்;
வலி நிறைந்த வாழ்க்கையின் அழகு, ஒலி நிறைந்த உணர்வுகளால் புலப்படும்;
கருநீலம் கொண்ட கடலின் அழகு, கரை வந்து போகும் சிற்றலைகளால் புலப்படும்;
நிலையற்ற உருவம் கொண்ட கல்லின் அழகு, அர்த்தமுள்ள உருகொண்ட சிலையினால் புலப்படும்!
மனதில் எழும் வினாக்களின் அழகு, மதியின் விடைகளால் புலப்படும்;
அழுகை கூட அழகுதான் ஆனந்தத்தால் புலப்படும்போது,
மனதில் தோன்றும் நல் எண்ணங்களின் அழகு, செய்யும் செயலால் புலப்படும்!
சுவாசிக்கும் மூச்சுக்காற்றின் அழகு, நம்மை நேசிக்கும் உறவுகளால் புலப்படும்;
இதயத்துடிப்பின் அழகு இமை மூடும் வேளையில் புலப்படும்;
கடந்து வந்த பாதையின் அழகு மனதில் எஞ்சியுள்ள நினைவுகளால் புலப்படும்;
பறந்து விரிந்த பாரின் அழகு, நாம் பார்க்கும் பார்வையால் புலப்படும்!
அழகானது, எதோ ஒரு வகையில் புலப்பட்டுக்கொண்டுதான் இருக்கும்.
நல் எண்ணம் கொள், உன் நன் நிலமைக்கு நீ வித்திடுவது அது மட்டுமே.
உன் அகத்தின் அழகும் புலப்படும் நிச்சயம் ஒருநாள் இவ்வுலகிற்கு எதோ ஒரு ரூபத்தில்....
வாழ்வெனும்  போராட்டத்தின் அழகு , நம் ஒவ்வொருவராலும் வரும் தலைமுறைகளுக்குப் புலப்பட்டுகொண்டு  தான் இருக்கும்!
            
                                                                                          இப்படிக்கு
                                                                                                  - வனப்பு மிகுந்த வாழ்க்கை.

Tagged in : beauty, Revealing the Beauty of Life, Hope, poem, life,

   

Similar Articles.