Loading...

Articles.

Enjoy your read!

உங்கள் அன்பு மகள்

நாள் முழுவதும் உழைத்து
உன் குழந்தையைப் பார்த்ததும் 
எவ்வளவு சோர்வு இருப்பினும்
அவை அனைத்தும் கரைந்து செல்லும்.
உன்‌ வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உன் குழந்தை
உன்னைக் கண்டதும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கும்
என்றும் மலர்ந்து இருக்கும் உன் முகம்
சிறிது வாடினாலும்
தாங்குமா ? அந்தச் சிறிய ‌நெஞ்சம்.
இது வரை அறியாத ஒரு புதிய உணர்வு
என்றும் காண விரும்பாத ஒரு விநோத சுழல்
அது அந்தப் பிஞ்சு நெஞ்சைச்  சோகக் கடலில் மூழ்கச் செய்யும்;
அதில் இருந்து அந்தப் பிஞ்சு நெஞ்சை மீட்க 
உன் சிரிப்பைத் தூண்டிலாகச் செலுத்திக் கரைக்கு அழைத்து வந்து 
காக்கும் உன் அன்புக் கரங்களின் அரவணைப்பில்
 பூத்துக் குலுங்கும் ஒர் அழகு மலர் அவள் !
என்றும் உன்னுடன் இருக்க விரும்பும் அந்த மலர்,
 ஒரு நாள் நீ இன்றி என் செய்யும்...?

Tagged in : daughter, Missing Dad, Father love, poem,

   

Similar Articles.