Loading...

Articles.

Enjoy your read!

தந்தையின் கானம் !

காதோர கானத்தை அழுகையால் தந்தவள் ;

இரும்பாய் ஏந்திய கைகளில் அரும்பாய் புதைந்தவள் ;

அவலப்படும் வேளையில் பவளமாய் சிரித்தவள் ;

இதழோர பருக்கையிலும் சிற்றழகால் இதயத்தைக் கொய்தவள் ;

கேசத்தின் நிறத்தினும் அடர் இரு விழிகளைக் கொண்டவள் ;

வெளிர் வெயிலிலும் வேகும் தேகத்தை உடையவள் ;

மண்ணிலும் புதையா கால்களைக் கொண்டவள் இன்று ,

மண்ணினுள் புதைந்து மென்மையாக வதைந்து கொண்டிருக்கிறாள்

என் அருமை மகள்......

என்னை அடியோடு மறந்து ,

மருந்தால் மகிழுண்டு ,

மண்ணினுள் மறைந்து ,

என்னை வன்மையாய் வதைத்துக் கொண்டிருக்கிறாள்.....

என் அருமை மகள்.....

Tagged in : father, daughter, poem,

   

Similar Articles.