Loading...

Articles.

Enjoy your read!

தீரா தேடல்

கதிரவன் மறைந்து காரிருள் சூழும் நேரம்

செங்கதிர் சாலையின் எழிலினைக் கண்டேன்,

வார்த்தை இழந்தேன்; வெண்மதி தவழும்

விண்ணிற்குச் சிறகின்றி பறந்து செல்லும் 

மொழி இல்லாக் கவிதையைப் பிடிக்க நினைத்தேன்;

அயலானைக் கண்டு குரைக்கின்ற நாய்களின்

சத்தம் கேட்டு விழித்தேன்;

அந்திவானின் அழகைக் கண்டு மதுவுண்ட 

வண்டாகி கனவுலகிற்குச் சென்றேன்; சென்றும்

தேடினேன் வனப்புமிகு வார்த்தைகளை.

 

Tagged in : SEARCH, ENDLESS, poem,

   

Similar Articles.