Loading...

Articles.

Enjoy your read!

மரணம்

நிகழ்காலத்தை நிருத்தும் மரபுக்கவிதை,

சுயநலத்தை மறக்கச் செய்யும் புதுக்கவிதை;

சிலருடைய மரணம் சிலருடைய அழுகையின் ஆரம்பம்.

கண்ணீர்த் துளிகள்-

உயிர் இல்லா மனிதனுக்கு

உயிர் உள்ளவர்கள்

உதிர்க்கும் குளியல் நீர்;

மிகக் கொடூர குணம் கொண்ட மனிதனையும்

சிலருடைய நாவினால் நல்லவன் எனப் பேசும்

மகிமை கொண்டது மரணம்;

மறுக்க முடியாது

இருப்பினும் ஏற்றாக வேண்டியது.

மரணத்தின் பின் நீ வாழ வேண்டுமா?

இரக்கம் கொள்;

இரவுகள் உறங்குவதற்கு மட்டுமல்ல

எனச் சிந்தித்துச் செயல் படு.

அடுத்தத் தலைமுறைக்கும்

உன் செயல்கள் நிலைக்கும் படி

உன் வாழ்வை மாற்று.

எதிரியும் உன்னை விரும்புவான்;

வசந்தங்கள் கூட

காலங்கள் மாற மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் இனி உன்

மரணத்தைக் காலங்கள் கூட

சாகடிக்க (மாற்ற) முடியாது.

Tagged in : change, people, KIND, death,

   

Similar Articles.