Loading...

Articles.

Enjoy your read!

கிறுக்கல்கள்!

குழந்தையின் கிறுக்கல் - முகத்தில்  

புன்னகை பூத்திடச் செய்யும் இதுவே

களங்கமற்ற மனதின் பிம்பங்கள்.

கிறுக்கல் தெளிந்து எழுத்தாகும்;

வாழ்வின் யதார்த்தம் புரிந்து

தெளிந்த மனமோ களங்கமாகும்.

 

ஆயுளையும் எடுக்கும்; ஆட்சியையும் குலைக்கும் 

அதிகாரத்தின் ஒரு கிறுக்கல்!

சிந்தனைச் சிந்திடும் சொற்களின் கோர்வையே 

கவிதையாம் - ஒரு கிறுக்கல்.

வாழ்வியல் புகட்டி வரலாறு கூறிடும்

குகை ஒவியம்- ஒரு கிறுக்கல்.

 

இயற்கையின் கிறுக்கலே பிரபஞ்சத்தின் கூறுகள்!

விண் மண் அனல் புனலென

வியப்பில் ஆழ்த்திடும் இவற்றை ஆளும்

விதிகளை அறிந்திட துடித்திடும் ஆர்வமே

மானுட வளர்ச்சிக்கு விழுதாய் நிற்கும்

விஞ்ஞான விருட்சத்தின் வித்துக்கள்.

 

தோல்வியோ துயரமோ, மனம் துவண்டு

விதியின் கிறுக்கல் சறுக்கல்  என்றிடாதே!

உயிர்நாடியின் கிறுக்கல் நேர்கோடு ஆகும்வரை 

ஓடித்திரியும் இந்த வாழ்க்கையும் 

உணர்வுகளின் வண்ணங்கள் கொண்டு,

நினைவுகள் தீட்டும் கிறுக்கலே...!

Tagged in : Memories, poem, Scribbles, life,

   

Similar Articles.