Loading...

Articles.

Enjoy your read!

ஆளப்பிறந்தவள்

புல்லும் மண்ணைப் பிளக்கும்

உன்புகழோ விண்ணை அளக்கும்

பரிதியோ கிழக்கில் உதிக்கும்

உன்புகழோ எத்திசையும் ஒலிக்கும்

மலையோ பரிதியையும் மறைக்கும்

உன்னை எவரால் தடுக்க இயலும்

நீ படும் கஷ்டமோ பல

உலகிற்கு தெரிந்ததோ சில

ரௌத்திப்பாலைப் நீ பருகி

அறத்துப்பாலைப் எமக்குப் புகுத்தி

வீட்டிற்குள் அன்பானவளாய்

எதற்கும் அசராதவளாய் 

கூண்டுக்குள் அடங்காதவளாய் 

எழுந்து வா ராஜாளி !!

ஆள வா !!

Tagged in : poem, PENNIYAM, AALAPIRANTHAVAL,

   

Similar Articles.