Loading...

Articles.

Enjoy your read!

கல்லூரி நட்பு

ஏதும் அறியாமல் யாரும் தெரியாமல்

வந்தேன் உறவுகளை பிரிந்து;

யாரோ எவரோ அறியாமல்

என் தனிமைக்குக் கிடைத்த விருந்து நீ

வெறுமை எனும் இருளில் இருந்து

என்னை மீட்ட கதிரவன் நீ;

 

கல்லூரியில் படித்த நாட்களை மிஞ்சும்

நாம் பேசி சிரித்த நாட்கள்

வகுப்பறை இருக்கைகள் பேசும்

நம் நீங்கா நினைவுகளை;

 

விடுதி அறைகள் சொல்லும்

நம் சேட்டைகளையும் சண்டைகளையும்

உன்னிடம் பேசாமல் இருந்த நொடிகள் சில

அதில் நான் அனுபவித்த இன்னல்கள் பல;

 

நீ இல்லாத நொடி நேரம்

நான் இருப்பேன் விரக்தியின் ஓரம்

காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை,

காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை

உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நம் நட்பு…!

Tagged in : college, friendship, poem,

   

Similar Articles.